« Song - Kelaamal Kaiyil »
|
 | Kelaamal Kaiyil
Movie: Azhagiya Thamizh Magan
பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற....
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற....
ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்
பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்..
நெஞ்சிலே காதலின் கால்தடம்..
கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்
ஆண் : இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை
போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
பெண் : மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உனை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன்
ஆண் : கூந்தலென்னும் ஏணி ஏறி
முத்தமிட ஆசைகள் உண்டு
பெண் : நெற்றி மூக்கு உதடு என்றே
இறங்கி வர படிகளும் உண்டு
ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்
பெண் : பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
ஏதோ நடக்கின்றதே ...?...
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்
உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
ஆண் : பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்
பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா
ஆண் : தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளில் விழுமா
பெண் : கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்
ஆண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்
பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்
Views: 7377 Date added: 20 December, 2007 Lyrics: | |
|
|
| |